அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14591 ஆக உயர்வு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 52 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 52 1

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 7 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் 1,900 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்து 95 ஆயிரத்து 589 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,578 ஆக அதிகரித்தது. தற்போது 17 ஆயிரத்து 424 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தநிலையில், நேற்று இந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசியை தன்னார்வத்துடன் வந்து போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.