சர்வதேச ரீதியில் நாளொன்றில் 4 இலட்சம் கொவிட்-19 தொற்றுறுதியானோர் அடையாளம் காணப்பட்ட முதலாவது நாடாக இந்திய பதிவாகியுள்ளது.
நேற்றிரவு 11 மணி வரையில், 408,323 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,163,488 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், இந்தியாவில் நேற்றைய நாளில் 3,464 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 211,778 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.