இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில், நேற்றிரவு 24 நோயாளர்கள் உயிரிழந்தனர்.
மருத்துவ பிராணவாயு பற்றாக்குறை காரணமாக, அவர்கள் உயிரிழந்தனரென கூறப்படுவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கர்நாடக அரசாங்கம் பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.