குற்றவியல் பிரேரணை டொனால்ட் ட்ரம் தோல்வி!

download 1 3
download 1 3

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க பிரதிநதிகள் சபையில் இடம்பெற்ற குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளதுடன் குறித்த வாக்கெடுப்புக்கு ஆதரவு 230 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ட்ரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ட்ரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.

ட்ரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் ட்ரம்ப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற ட்ரம்புக்கு எதிரான 2 ஆவது தீர்மானமும் நிறைவேறியது.