சீனாவில் எரிவாயு வெடித்ததால் 11 பேர் பலி! 140க்கும் மேற்பட்டோர் காயம்!

E3vJqX1XwAE6XQ8
E3vJqX1XwAE6XQ8

சீன மாகாணமான ஹூபேயில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு மத்திய தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு (சனிக்கிழமை 22:30) ஷியான் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகப் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அனர்த்தத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளமையினால் உயிரிழப்புகள் உயர்வடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.