21 – 22 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி 2
கொரோனா தடுப்பூசி 2

பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம், 21 மற்றும் 22 வயதினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து, அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 10 லட்சம் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட வயதினர் மட்டுமே நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள முடியும், அந்தப் பட்டியலில் தற்போது 21 மற்றும் 22 வயதுப் பிரிவினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை அடுத்து, 18 வயது முதல் 20 வயது வரை கொண்டவர்கள் மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.