ஹைய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜொவெனல் மொய்ஸ் (53) இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (06) இரவு அவரின் சொந்த வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத குழுவொன்று ஜனாதிபதியின் வீட்டுக்கு நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இதில் ஜனாதிபதியின் மனைவியும் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் கொலை தொடர்பில் ஹெயிட்டி நாட்டின் இடைக்கால பிரதமர் க்ளைவ்ட் ஜோசப் ட்விட்டரில் பதிவொன்றில் இதுவொரு திட்டமிட்ட கொலை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வீட்டிற்குள் அத்துமீறி பிரவேசித்த சந்தேகநபர்கள் ஸ்பானிய மொழியில் பேசியுள்ளதால் அவர்கள் ஸ்பானியர்களாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.