இந்தோனேஷியாவில் கொரோனாவால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

baby
baby

இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இறப்பு வீதம் ஏனைய நாடுகளை விடவும் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள டெல்டா கொரோனா வைரஸ் திரிபு காரணமாக அதிகளவான குழந்தைகள் உயிரிழப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.