ஆப்கானிஸ்தானில் கடந்த ஒருவாரத்தில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர்கள் அங்கிருந்து வெளியேறிவரும் நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினர் கடந்த ஒரு வாரத்தில் 20 மாகாணங்களில் மேற்கொண்ட 154 இராணுவ தாக்குதல்களில் அதிகளவான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இதற்கு தலிபான் பயங்கரவாதிகள் அமைப்பு மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.