கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு

thumb 216
thumb 216

இந்தியாவில் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி கைத்தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டபடி பேசிய போது கைத்தொலைபேசி வெடித்து படுகாயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை எதுவும் நடத்தாமல் அவரது உடலை  அவரது குடும்பத்தினர் எரித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.