சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்ததன் மூலம் தமக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தமிழில் அறிவிப்புச் செய்தமையினூடாக தனது நீண்ட கால ஆசை நிறைவேறியதாக குறித்த அறிவிப்பினை மேற்கொண்ட சரவணன் அய்யாவு தெரிவித்திருந்தார்.
விமானம் தரையிறங்கும் முன்னர் அது குறித்த தகவல்கள் 4 மொழிகளிலும் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பை அவ்வப்போது நான்கு மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம் என்றும் சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.