பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 35 பேர் பலி

2 4
2 4

பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோவில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் பொலிஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.