இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் 12 முதல் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அந்த நாட்டின் வைத்திய அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாடசாலைகளில் இருந்து கொவிட்19 வைரஸ் பரவலடைவதனை தவிர்க்க முடியும் என்பதுடன், சிறுவர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும், தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களினதும் அனுமதி பெறப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.