சீனாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி : 5 பேர் மாயம்

freepressjournal import 2017 10 boat capsize
freepressjournal import 2017 10 boat capsize

சீனாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகொன்று கவிழ்ந்த சம்பவத்தையடுத்து மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று(19) வரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 5 பேர் மாயமாகியுள்ளதோடு அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்துக்குள்ளான படகில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.