கொவிட் பரவல் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அனைத்து நாடுகளிலுமுள்ள பயணிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியும்.
எனினும் வருகைத்தரும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.