அமெரிக்காவைச் சேர்ந்த தூதுக்குழு ஒன்றின் 17 உறுப்பினர்களைக் கடத்தியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஹெய்ட்டியை சேர்ந்த சட்டவிரோத குழுவின் தலைவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமது தரப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து குறித்த 17 பேரும் கொல்லப்படுவர் என அவர் எச்சரித்துள்ளார்.
400 மாவோசோ என்ற சட்டவிரோத குழுவினரே அவர்களைக் கடத்தியிருக்கலாமென நம்பப்படுகின்றது.
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு தலா ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலர் வீதம், அந்தக் குழுவினர் கோரியுள்ளதாக ஹெய்ட்டி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.