சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் நீதிபதி கைது!

1624934089 arrested 2
1624934089 arrested 2

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் நகரில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளைக் கையாளும் சிறப்பு நீதிபதி ஒருவருக்கு எதிராக, 14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக சிறுவனை மிரட்டி நீதிபதியும், மேலும் 2 நபர்களும் இணைந்து துன்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவனை மிரட்டி அவரை ஆபாசமாக படம் பிடித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நீதிபதி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நீதிபதியை ராஜஸ்தான் மேல் நீதிமன்றம் பணி இடைநீக்கம் செய்தது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சம்பந்தப்பட்ட நீதிபதி உள்ளிட்ட மேலும் இருவர் ராஜஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.