நைஜீரியாவின் இயோகி மாவட்டத்தில் 21 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைய, இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சம்பவம் நிகழும் போது கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்காததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.