இந்தியாவில் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பச்சிளம் குழந்தைகள் பலி!

201910042238389981 sugar cane gardern fire in velayuthampalayam SECVPF
201910042238389981 sugar cane gardern fire in velayuthampalayam SECVPF

இந்தியாவின் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அரச மருத்துவமனையில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மருத்துமனையின் சிறுவர்கள் சிகிச்சை பிரிவில் நேற்றிரவு குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த 36 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீப்பரவல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் சிவாராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.