எத்தியோப்பியாவில் ஐ.நா பணியாளர்கள் உள்ளிட்ட பலர் தடுத்து வைப்பு!

download 1 3
download 1 3

எத்தியோப்பியாவின் தலைநகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 16 பணியாளர்கள் உள்ளிட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை.

எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடு சபை அறிவித்துள்ளது.

எத்தியோப்பிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் ஆயுத குழுக்களினால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத நிலையில் நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.