சென்னை பெருமழை காரணமாக போக்குவரத்தில் மாற்றம்

in 01 750x375 1
in 01 750x375 1

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாதவரம் எம்.ஆர்.ஹெச். சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகம் காணப்படுவதால் சாலையில் ஒருபுறம் மூடப்பட்டு அனைத்து வாகனங்களும் ஒரே பகுதியைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதேபோன்று தியாகராய நகர் பகுதியில் காமராஜர் இல்லம் வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாறாக வாணி மகால், பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் பகுதியில் பேரக்ஸ் சாலை பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக புளியந்தோப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் பிரிக்ளின் சாலை, ஸ்ட்ராஹன்ஸ் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.