தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்தியது இந்தியா

கொவிட்-19 காரணமாக இந்தியா, சர்வதேச நாடுகளுக்கு விதித்திருந்த சில தனிமைப்படுத்தல் விதிகளைத் தளர்த்துகின்றது.

இந்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 99 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் பிரவேசிக்கும்போது அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.