ஒமிக்ரொன் வைரஸ் திரிபு பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பயணக்கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கின்றது.
இதன்படி, பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை 12 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் வைத்திருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் குறித்த பரிசோதனை அறிக்கை பெறப்பட்டிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்து தொற்று உறுதியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரையிலான இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும் நைஜீரியா சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதோடு அங்கிருந்து நாட்டுக்குள் பிரவேசிக்கும் பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என பிரித்தானிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.