உலங்குவாநூர்தி அனர்த்தத்தில் நேற்று முன்தினம் மரணமான இந்திய முப்படைகளின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜென்ரல் பிப்பின் ராவத் மற்றும் அவரது பாரியார் ஆகியோரின் பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி பிரார் தகனசாலைக்கு பூதவுடல்கள் எடுத்துச் சென்ற போது வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான படையணியினர் அணிவகுத்திருந்தனர்.
முன்னதாக டெல்லியில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் பூதவுடல்கள் வைக்கப்பட்டிருந்த வேளையில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.