திருவிழாவில் சண்டையிட்ட இளைஞர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை!

indidan police
indidan police

திருவிழாவில் சண்டையிட்ட இளைஞர்களுக்கு காவல்துறை நூதன தண்டனை விதித்துள்ளது.

கோவை மாவட்டம் மரப்பாலம் அருகே உள்ள ஐயப்பன் கோவில் ஒன்றில் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்படவே யாரும் எதிர்பாராத வகையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தகராறில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தினர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மனப்பாடமாக 100 திருக்குறளை படித்து பார்க்காமல் எழுத வேண்டும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் வேறு வழியில்லாத இளைஞர்கள் பலமணி நேரம் மனப்பாடம் செய்து திருக்குறளை எழுதி கொடுத்துள்ளனர்.

பின்னர் இளைஞர்கள் அனைவருக்கும் காவல்துறை அதிகாரிகள் அறிவுரை சொல்லி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.