கர்நாடகாவில் பல்லி விழுந்த மதிய உணவை உண்ட பாடசாலை மாணவர்கள் 80 பேர் மருத்துவமனையில்!

1600x960 155486 lizardfb
1600x960 155486 lizardfb

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டமையால், 80 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் உள்ள அரச பாடசாலையொன்றில் வழமை போல் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த மதிய உணவை உண்ட 80 மாணவர்கள்  சிறிது நேரத்தில் நோய்வாய்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த மாணவர்கள் அரச மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.