பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பிரதமராக யார் தெரிவாக வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றில் இம்ரான்கானுக்கு எதிராக அண்மையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அவநம்பிக்கை பிரேரணை வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.
இந்தநிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷெபாஸ் ஷெரீப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டர் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.