நியூசிலாந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச பயணிகளுக்காக தமது எல்லையை மீண்டும் திறந்துள்ளது.
இன்று முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நியூசிலாந்துக்குள் பிரவேசிப்பவர்கள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றிருத்தல் வேண்டும் எனவும் கொவிட்-19 பரிசோதனை அறிக்கையை உடன் வைத்திருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
இதற்கமைய 60 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலிய நாட்டு பிரஜைகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.