ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இங்கிலாந்து விமானம் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் குண்டுத்தாக்குதலில் ஈரானின் இராணுவத்தளபதி கொலை செய்யப்பட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் ஒன்று ஈராக் வான்பரப்பில் நுழைந்த விமானம் திடீரென எதென்ஸ் வழியாக இங்கிலாந்து நோக்கிச் சென்றது. இதன்போது, அமெரிக்கா படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, பிரித்தானிய ஏர்வேஸ் விமானத்தில் இருந்த 200 பயணிகளும் உயிர் தப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.