உக்ரேனிய விமான தாக்குதல் – ஈரான் விளக்கம்

flag of iran vector logo
flag of iran vector logo

சமீபத்தில் ஈரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 180 பேருடன் பயணித்த உக்ரேனிய நாட்டுக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விமான விபத்து தொடர்பில் ஈரான் நேற்று(20) விளக்கமளித்துள்ளது.

மனித தவறுகளின் காரணமாக மேற்படி விமான விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், தரையில் இருந்து சுடப்பட்ட இரண்டு குறுகிய தூர ஏவுகணைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஈரானிய சிவில் சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.