ஆபிரிக்காவில் பக்தர்களிடமிருந்து மலைப்பாம்பு மீட்பு!

3 1
3 1

தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆபிரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது.

10 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தான்சானியாவின் காசாலா காட்டுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு காணப்பட்டது.

தெய்வீக சக்தி கொண்ட பாம்பு, இதற்கு உணவு படைத்தால் தாங்கள் விரும்பியது நடக்கும் என்று நம்பிய பக்தர்கள், அந்த பாம்பை பிடித்து அதிகமான உணவுகளை கொடுத்து வைத்திருந்தனர். இவற்றை உண்ண முடியாமல் பாம்பு திணறி உள்ளது.

இந்த சூழலில் அதிகாரிகள் அந்த பாம்பை மீட்டுள்ளனர்.