கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

corona1
corona1

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது.

சீனா முழுவதும் 6000 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.

வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.