தனியார் மருத்துவமனை நடத்த அரசு மருத்துவர்களுக்குத் தடை- ஆந்திர முதல்வர் தெரிவிப்பு

jagan reddy
jagan reddy

“அரசு மருத்துவர்கள் யாரும் இனி தனியார் மருத்துவமனைகளை நடத்தக் கூடாது” என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று பேசியதாவது

அரசின் “ஆரோக்கிய ஸ்ரீ” மருத்துவ அட்டை வைத்திருக்கும் ஏழைகளுக்கு மருத்துவச் செலவு 1,000 ரூபாவிற்கு தாண்டினால் மற்ற செலவுகளை அரசே ஏற்கும். இத்திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் குடும்பத்தினருக்கு, நோயாளி குணம் அடையும் வரை மாதம் 5000 ரூபா நிதி உதவி வழங்கப்படும்.

ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் 2,000 நோய்கள் இணைக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற் றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை அல்லது ‘கிளினிக்’ நடத்தக் கூடாது என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.