கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு முழு உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவரான மைக் ரயன் தெரிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் தாக்கம் குறித்து விவாதிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (30) அவசரமாக கூடவுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.