தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி

corona 2
corona 2

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழகத்தில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை தொடர்ந்து
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸ் தோற்று காரணமாக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் நாள் சீனாவிலிருந்து திருவண்ணாமலை சென்ற அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று அவர், தான் சீனாவிலிருந்து வந்துள்ளதாகவும், கொரோனா அறிகுறிகுறிகள் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை தனி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். சந்தேகத்தின் பேரிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே கொரோனா தொற்று உள்ளதா என உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.