விடைபெற்றார் நீதிபதி தஹில் ரமணி!

thakil ramani
thakil ramani

2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தின்போது ராந்திக் என்ற கிராமத்தில் பானே என்ற பெண்ணின் குடும்பத்தின் மீது கூட்டாக சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் பானே குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட 7 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது பானே கர்பமாக இருந்தார். கர்ப்பிணி பானேவை, அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது.

நாடே திரும்பி பார்த்தது

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு அப்போது மும்பை உயர் நீதிமன்ற் நீதிபதியாக இருந்த தஹில் ரமணி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஹில் ரமணி உத்தரவிட்டார். மேலும் வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களையும் பணியில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு நாட்டையே இவர் பக்கம் திரும்பி பார்க்க செய்தது.

பதிவி உயர்வு

தஹில் ரமணி, கடந்த 2018ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டதன் மூலம், நாட்டில் 2 பெண் தலைமை நீதிபதிகளில் இவரும் ஒருவரானார். இதற்கு முன் மும்பை நீதிபதியாக இருந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக பணி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.

வழக்கறிஞர்கள் ஆதரவு பெற்ற தலைமை நீதிபதி

தமிழகத்துக்கு மாற்றப்பட்ட தஹில் ரமணி, தனது பணியை சரியாக செய்து வந்ததாகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஒராண்டாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்துவந்த தஹில் ரமணி, இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். தஹில் ரமணி தனது தலைமை பொறுப்புடன் சரியாக நடந்து கொள்ளும் நபர் என உயர் நீதிமன்ற நீதிபதிகளே கருத்துக் கூறியதாக செய்திகள் சமீபத்தில் வெளியாகின.

இந்த சூழலில் செப்.மாதத் தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு, தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து தனது பரிந்துரையை மத்திய அரசிடம் அளிந்த்திருந்தது.

இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தஹில் ரமணி கொலிஜியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். கடிதத்தில் பணியிடமாற்றம் தொடர்பான பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறும், மாற்ற வேண்டிய கட்டாயம் ஏன்? என்றும் கேட்டிருந்தார்.

கொலிஜியத்துக்கு கடிதம்

இந்த கடிதத்துக்கு கொலிஜியம், “பணியிட மாற்றம் செய்யப்படுவது தொடர்பான காரணத்தை கூற வேண்டிய அவசியமில்லை. தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக தெரிவிப்போம்” எனப் பதில் அனுப்பி இருந்தது. மேலும், “கொலிஜியத்தின் முடிவுக்கு தஹில் ரமணி
மதிப்பளிக்க வேண்டும்”
எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

கொலிஜியத்தை பற்றி நினைக்கவில்லை… முடிவை அறிவித்தார் தஹில் ரமணி

இதற்கிடையில் பதில் வருவதற்கு முன்பே தஹில் ரமணி, தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். தஹில் ரமணி இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் பல நீதிபதிகளும் இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

கொலிஜியம் வெட்கக்கேடானது

தஹில் ரமணி இடமாற்றம் குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பத்திரிக்கைகளிடம் கூறுகையில், “நாட்டில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான தஹில் ரமணி, இடமாற்றம் செய்யும் முடிவு வெட்கக்கேடானது. முந்தைய நாட்களில் அவர் வழங்கிய தீர்ப்புக்காக பழிவாங்கும் விதமாகவே மேகாலயாவுக்கு மாற்றியுள்ளனர். இந்த நேரத்தில் ராஜினாமா கடிதத்தை தஹில் ரமணி அனுப்பியது வரவேற்கத்தக்கது” என்றிருந்தார்.

கொலிஜியத்துக்கான கேள்விகள்

இதே வேலையில் தஹில் இடமாற்றம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக தமிழகத்தில் 75 நீதிபதிகளை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தை நிர்வகித்து வரும் பொறுப்பில் இருப்பவரை, 3 நீதிபதிகளை கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்பது சர்ச்சையானது.

“ஒருவேலை மேகாலயாவில் அவசர சூழல் ஏற்பட்டிருந்தால், இந்த முடிவு ஏற்கக்கூடியது. அப்படியல்லாது தமிழத்தில் தஹில் ரமணி மீது எதாவது குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தால், பணியிட மாற்றம் செய்யலாம், ஆனால் அப்படி எதுவும் நேராமல் இதுபோன்ற முடிவை கொலிஜியம் எடுப்பது சர்ச்சையாகவே இருக்கிறது” என வழக்கறிஞர்கள் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளிக்க தொடங்கினர்.

தமிழகத்துக்கு பொறுப்பு நீதிபதி

இப்படி பல கேள்விகள் எழுந்தபோதும், கொலிஜியம் தேவை ஏற்பட்டால் காரணத்தை விளக்குகிறோம் எனக் கூறியுள்ளது. இந்நிலையில், தஹில் ரமணி அளித்த ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை பணியமர்த்தியுள்ளது.