மீண்டும் அமேசான் காடுகளில் அழிவு!

7 hffr
7 hffr

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றை உன்னிப்பாக அவதானித்துவரும் நிலையில், பிரேஸில் தனது காடுகளை பெரிய அளவில் அழிப்பதில் கவனம் செலுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் காடழிப்பு செயற்பாடுகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரேஸிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமேசானில் சட்டவிரோத காடழிப்பு செயற்பாடுகள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வந்ததைத் தொடர்ந்து, அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது மற்றும் சுரங்கங்களை தோண்டுவது உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ஆயுதமேந்திய இராணுவத்தினரை நிலைநிறுத்தும் திட்டத்தை அவர் அறிவித்தார். இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.