சீன தலைநகரில் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை!

B4J
B4J

சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் திகதி கண்டறியப்பட்ட கொரோனா இன்று உலகையே ஆட்டம் காண செய்துள்ளது.

இந்த 5 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில், உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது.

உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதே வேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதலும், சமூக இடைவேளியும் இன்றியமையாததாக விளங்குகிறது.

இந்நிலையில் சீன தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள மக்களுக்கு,பெய்ஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘பெய்ஜிங் நகரில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய தேவையில்லை, என்றும் அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ள தகவலில். பொதுமக்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை. ஆனால் நிச்சயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அதே நேரத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தையும், ஆரோக்கியத்தையும் காக்கும் வகையில், வீட்டினுள்ளே உடற்பயிற்சி செய்து கொள்ளலாம் ‘ என தெரிவிக்கப்ட்டுள்ளது.