பாலியல் குற்றச்சாட்டில் நேபாள பாராளுமன்றத்தின் சபாநாயகர் கைது

mahara
mahara

நேபாள பாராளுமன்றத்தின் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நேற்யை தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் போதையில் தனது வீட்டுக்கு வந்த சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா தன்னை பலவந்தமாக பாலியல் தொல்லை செய்ய முயன்று காயப்படுத்தி விட்டதாக கூறினார். மேலும் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் கூறி இருந்தார்.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்த அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சபாநாயகர் பதவியினை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

சபாநாயகராக இல்லாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துவரும் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை பாலியல் தொல்லை செய்ய முயன்ற வழக்கில் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சமாக ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.