சீன அதிபரின் இந்திய விஜயம்- தமிழக திபெத் இளைஞர்கள் கறுப்புக்கொடி

CHINA INDIA
CHINA INDIA

சீன அதிபர் எதிர்வரும் 11 ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர் வரும் 11,12 ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் வரலாற்று சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். இதனால் மாமல்லபுரம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இயங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர் வரும் 11ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வாழும் திபெத் இளைஞர்கள் சிலர் சீன அதிபரின் வருகையை எதிர்க்கும் வகையில் கருப்புக் கொடி காட்டப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் பொலீசார் 8 திபெத் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் கல்லூரியில் பணி புரிந்து வரும் திபெத் பேராசிரியர் டென்சின் நோர்பு இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சீன அதிபரின் வருகையையொட்டி கல்லூரி பேராசிரியர் கைதாகியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக சீன அதிபர் ஒருவர் சென்னைக்கு வருவதையொட்டி, பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

11 ஆம் திகதி நடக்கவிருக்கும் சந்திப்பை அடுத்து ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் மற்றும் சிற்பங்களை கண்டுகளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் இதுவரை இல்லாத அளவிற்கு மாமல்லபுரம் புதுப் பொலிவுடன் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.