எத்தியோப்பிய பிரதமருக்கு 2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ethiyopiya
ethiyopiya

உலகில் உள்ள 6 முக்கியத் துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான எரித்திரியா உடன் நீண்ட காலமாக நீடித்துவந்த சச்சரவுகளைக் களைய முயற்சியெடுத்தமைக்காக அபி அகமது அலிக்கு 2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச ஒற்றுமைக்காகவும் பல முயற்சிகளை எடுத்துள்ளார். எத்திரியா உடனான எல்லைப் பிரச்னைக்கும் தீர்வு கண்டுள்ளார். இதற்காகவே அபி அகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்” என நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.