ஹகிபிஸ் புயல்; பெருமளவிலானோர் மீட்பு பணிகளில்

japan 1
japan 1

ஜப்பானில் கடந்த சனிக்கிழமை வீசிய ஹகிபிஸ் சூறாவளியினால் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சூறாவளியின் வேகம் தற்சமயம் குறைவடைந்திருப்பதகவும் ஜப்பானின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சூறாவளியாக இது கருதப்படுகிறது.

வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்று ஜப்பான் பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.