உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்தை கடந்துள்ளது.
நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.14 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 86 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 5 நாட்களில் தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து 400க்கும் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 85% பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.