இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 724 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது.
இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 648 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் இதுவரை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 11 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்ற வரும் நிலையில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 50 பேர் குணமடைந்துள்ளனர். 28 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3 லட்சத்து 27 ஆயிரத்து 31 பேரும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 பேரும், டெல்லியில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 96 பேரும், உத்தர பிரதேசத்தில் 53 ஆயிரத்து 288 பேரும், கர்நாடகாவில் 71 ஆயிரத்து 69 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 3 லட்சத்து 43 ஆயிரத்து 243 பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.