திபேத்தில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்!

IMG 20200722 141913
IMG 20200722 141913

திபேத்தில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4.07 மணியளவில் நைமா கவுண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க நிலையத்தை மேற்கோள்காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தொலைதொடர்பு, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் ஆகியவை வழமைபோல் இயங்குகின்றன.

நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்ட ரோங்மார் டவுன்ஷிப்பில் பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.