கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது

.jpg
.jpg

தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவரை நேற்றைய தினம் மண்டபம் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளிகளை மேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மண்டபம் வனசரக அதிகாரி வெங்கடேஸ் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இலங்கைக்கு கடத்த இருந்த 4 ஆயிரத்து 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளையும் ஐந்து கடத்தல்காரர்களையும் மண்டபம் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.