விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

vikravandi
vikravandi

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு நடந்து முடிந்த இடங்களில் வாக்கு இயந்திரங்களிற்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் திகதி எண்ணப்படவுள்ளன.