பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தநிலையில் சபாநாயகர் ஜோன் பேர்கோ மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்த ஒரு தீர்மானம் சனிக்கிழமையன்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டதாகவும், அதை மீண்டும் விவாதிப்பது ஒழுங்கற்றதாக இருக்கும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் முடிவு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், வெளியேறுவதற்குத் தேவையான சட்டத்தை அரசாங்கம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.