தோனி தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்.பி சுப்பிரமணியன் வேண்டுகோள்!

226565 1
226565 1

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்.பி சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளிலி் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்றைய தினம் தனது இன்ஸ்ராகிராமில் தோனி அறிவித்த நிலையிலேயே சுப்ரமணியன்சுவாமி மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வுபெற்றிருக்கிறாரே தவிர, வேறு எதிலிருந்தும் அல்ல. அவர் தடையை எதிர்த்து போராடும் திறன்கொண்டவர். கிரிக்கெட்டில் ஒரு அணியை முன்னுதாரணமாக வழிநடத்தும் அவரது திறமை பொது வாழ்விற்கும் வேண்டும். அவர் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.