ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
வௌ்ளத்தினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் இடர்முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தில் சிக்குண்ட மேலும் பலரை தேடி மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வௌ்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிகக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.